Showing posts with label மாத்திரை. Show all posts
Showing posts with label மாத்திரை. Show all posts

Saturday, 26 November 2016

மாத்திரை

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று,
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை ஒன்று;
உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரை என்பது எழுத்தை ஒலிக்கும் கால நேரத்தை வரையறை செய்யும் கருவியாகும்.
இயல்பாக, மேற்சொன்ன மாத்திரை அளவில் ஒலிக்கும் எழுத்துகள், பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், அராகத்திலும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பதே தமிழின் முதல் எழுத்துகள் என்று கண்டோம். இந்த முப்பது ஒலிகளை வைத்து மட்டுமே இயங்குவதே நம் தாய்மொழியான தமிழ் என்க.