Showing posts with label உயிர்மெய். Show all posts
Showing posts with label உயிர்மெய். Show all posts

Sunday, 4 December 2016

உயிர்மெய் எழுத்துகள்

உயிர் ஏறிய மெய்களே உயிர்மெய்களாம். அவை குறில் நெடில் என்றும், வல்லின மெல்லின இடையினமாயும் வகைப்படுத்தப்படும். உயிர் மெய்யெழுத்துகளாவன, பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.