பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகளாகும். மற்றவை மொழிக்கு முதலில் வாரா...
எ-டு.
எ-டு.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சான்று, ஞாயிறு, நன்மை, பூ, மணி, யாழ், வயல்.
எந்த மெய்யெழுத்திலும், எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
ங, ட, ண, ர,ல, ழ, ள, ற, ன
என்ற வரிசை உயிர்மெய்களைக் கொண்டு, எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
இவைகளுள்ளே,
க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
- களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை, கௌவை.
- சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரை, செக்கு, சேவல், சைவம், சொன்றி, சோறு,
- தகை, தார், திரை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு, தௌவை.
- நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌவி.
- பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
- மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேடு, மையல், மொட்டு, மோனை, மௌவல்.
வகரமெய்
வகரமெய் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
எ-டு.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.
யகரமெய்
யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும்.
ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.
ஞகரமெய்
ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
எ-டு.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.
No comments:
Post a Comment