இறுதி நிலை - சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள்
எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.
இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.
எ-டு.
விள, பலா, கிளி, தீ,
கடு, பூ, சே, கை, நொ,
போ, வெள, உரிஞ், மண்,
வெரிந், மரம், பொன், காய்,
வேர், வேல், தெவ், யாழ், வாள்.
இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
அசோக், கிரீச், பிசரட், பிரசாந்த், பிரதாப் என்பன போன்றவை தமிழாகா என்றறிக.இவற்றைப் பலுக்கிப் பார்த்து இவை விலக்கப்பட்டமை ஏன் என்றும் உணர்க.
"எண்ணித் துணிக" இதில் "த்" எழுத்தில் இறுதியில் உள்ளதை எவ்வாறு கொள்ள வேண்டும்?
ReplyDelete