Monday, 5 December 2016

இறுதி நிலை

இறுதி நிலை - சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள்

எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.

எ-டு.
விள,    பலா,     கிளி,    தீ,
கடு,       பூ,       சே,     கை,    நொ, 
போ,    வெள,   உரிஞ்,   மண்,
வெரிந்,  மரம்,   பொன்,  காய்,
வேர்,    வேல்,    தெவ்,  யாழ்,   வாள்.

இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
அசோக், கிரீச், பிசரட், பிரசாந்த், பிரதாப் என்பன போன்றவை தமிழாகா என்றறிக.
இவற்றைப் பலுக்கிப் பார்த்து இவை விலக்கப்பட்டமை ஏன் என்றும் உணர்க.

1 comment:

  1. "எண்ணித் துணிக" இதில் "த்" எழுத்தில் இறுதியில் உள்ளதை எவ்வாறு கொள்ள வேண்டும்?

    ReplyDelete