உயிர்
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ
ஐ
ஒ ஓ
ஔ
மெய்
க் ங்
ச் ஞ்
ட் ண்
த் ந்
ப் ம்
ய் ர் ல் வ் ழ் ள்
ற் ன்
உயிர்மெய்
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங . . . . .
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ . . . . . . . .
.
.
.
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
ஆய்தம்
ஃ
நெடுங்கணக்கு வைப்புமுறை
சிறப்பினாலும் இனத்தினாலும் ஆன முறைப்படி வைக்கப்பட்டதே தமிழ் நெடுங்கணக்கு ஆகும்.
முதல் எழுத்துகளான உயிரும் மெய்யும் ஆன முப்பதும் முதலில் வைக்கப்பட்டன.
அவற்றுள், தனித்து இயங்கும் சிறப்பு கொண்டதனால் முதலில் உயிர் எழுத்துகள் வைக்கப்பட்டன. அச்சிறப்பில்லா மெய்கள் அவற்றின் கீழே வைக்கப்பட்டன.
அவற்றுள், தனித்து இயங்கும் சிறப்பு கொண்டதனால் முதலில் உயிர் எழுத்துகள் வைக்கப்பட்டன. அச்சிறப்பில்லா மெய்கள் அவற்றின் கீழே வைக்கப்பட்டன.
உயிர் எழுத்துகள் வைப்பு முறை:
அவ்வுயிர்களுள், அங்காத்தல் அதாவது வாயைத் திறத்தலால் உருவாகும் சிறப்பினதான அகரம் எல்லாவற்றுக்கும் முதன்மையாக வைக்கப்பட்டன.அகர முதல வெழுத்தெல்லாம்
என்று வள்ளுவர் இதையே வழிமொழிவார்.
அடிப்படை உயிர்களான அ இ உ என்பன முதலில் வைக்கப்பட்டதன் காரணம் அவை பிறக்கும் முறைமையினால் என்க. (பிறக்கும் முறைமை என்றால் அவ்வொலிகளை நாம் எந்தெந்த உறுப்புகளின் முயற்சி கொண்டு பலுக்குகிறோம் என்பதே என்க)
அகரம் என்பது அங்காந்து கூறும் முயற்சியாலும், இகரம் என்பது அவ்வங்காப்போடு அண்பல்லில் அடிநாக்கு விளிம்பு உறுவதாலான முயற்சியாலும், உகரம் என்பது அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியாலும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.
ஆகார ஈகார ஊகாரங்கள், அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.
அகரம் என்பது அங்காந்து கூறும் முயற்சியாலும், இகரம் என்பது அவ்வங்காப்போடு அண்பல்லில் அடிநாக்கு விளிம்பு உறுவதாலான முயற்சியாலும், உகரம் என்பது அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியாலும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.
ஆகார ஈகார ஊகாரங்கள், அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.
முறை:
இனத்தினால் குறில்களுக்குப் பின் அவற்றின் இனமான நெடில்கள் வைக்கப்பட்டன.
ஒரே இடத்தில் பிறந்த எழுத்துகள், ஒரே இனமாகக் கொள்ளப்பட்டன.
இனத்தினால் குறில்களுக்குப் பின் அவற்றின் இனமான நெடில்கள் வைக்கப்பட்டன.
அகரத்திற்கு ஆகாரம் இனம்அதன்படியே வைக்கப்பட்டன.
எகரத்திற்கு ஏகாரம் இனம்
ஒகரத்திற்கு ஓகாரம் இனம்.
ஒரே இடத்தில் பிறந்த எழுத்துகள், ஒரே இனமாகக் கொள்ளப்பட்டன.
இன எழுத்துகள் - மெய்
க - ஙஎன்பவை இன எழுத்துகள் என்று கண்டோம். இவற்றைச் சொல்லிப் பார்த்து இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கும் உண்மையைக் கண்டு கொள்க.
ச - ஞ
ட - ண
த - ந
ப - ம
ற - ன
மெய் எழுத்துகளின் வைப்புமுறை
வலியவர் மெலியவருக்குப் பின்னே செல்வது போல வலிமைச் சிறப்பினால் க ச ட த ப ற எனும் வல்லின மெய்கள் முன்னாலும், அவற்றின் இன எழுத்துகளான ங ஞ ண ந ம ன ஆகிய மெல்லின எழுத்துகள் அவற்றின் பின்னாலும் முறையே வைக்கப்பட்டன. இடையினம் ஆறும் ஒரே இனமாதலால் அவை ஆறும் வரிசையாக ய ர ல வ ழ ள என்று வைக்கப்பட்டன. ஆனாலும், அவற்றைத் தனியே தொங்க விடக் கூடாது என்பதால், வல்லின மெல்லின இணையான 'ற ன' என்பதை அவற்றின் பின்னர் வைத்து, மெய் எழுத்துகளின் வைப்பு முறை அமைக்கப்பட்டது.இதுவே சிறப்பினாலும் இனத்தினாலும் வைக்கப்பட்ட முறைமை ஆகும்.