உயிரெழுத்துகள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துகளும் ஆகும். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----
-----
உயிரெழுத்துகள், குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), என இரண்டு வகைப்படும்.
-----
குற்றெழுத்துகள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----
நெட்டெழுத்துகள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.
-----
-----
குற்றெழுத்துகள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----
நெட்டெழுத்துகள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டு எழுத்துகளும் ஆகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----
வல்லெழுத்துகள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----
மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----
இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
----
-----
வல்லெழுத்துகள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----
மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----
இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
----
உயிர் எழுத்துகளுக்கு 'உயிர்' என்றும் மெய் எழுத்துகளுக்கு 'மெய்' என்றும் 'உடம்பு' என்றும் தமிழர் பெயர் கொடுத்தது ஏன்?
உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு
விளங்குகின்றன. உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து
அறிய முடிகின்றது.
இதனால்,
- உயிர்
- உடல்
- உயிரும் உடலும் இணைந்த உயிரினம்
ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
- உயிர் எழுத்து
- மெய் எழுத்து
- உயிர்மெய் எழுத்து
க், ங், ச், ஞ், என்ற உயிர்மெய்களை உயிர் எழுத்துகளின் உதவியின்றி சொல்லவே முடியாது.
க் என்பதை, 'இக்கு' என்று நாம் சொல்லும்போதும், இகர உயிரையும் உகர உயிரையும் சேர்த்தே பலுக்குவதைக் காண்க.
இதனால் இவை உடம்பு எனவும் மெய் எனவும் அழைக்கப்பட்டன.
க் என்பதை, 'இக்கு' என்று நாம் சொல்லும்போதும், இகர உயிரையும் உகர உயிரையும் சேர்த்தே பலுக்குவதைக் காண்க.
இதனால் இவை உடம்பு எனவும் மெய் எனவும் அழைக்கப்பட்டன.
உயிர் ஏறிய மெய்கள் உயிர்மெய்களாகும். உயிர்மெய் என்பது, பிராணி என்ற அயற்சொல்லால் அழிக்கப்படும் முன், அந்தப் பொருளில் வழங்கி வந்த ஒன்றே ஆகும்.
உயிர் மெய்யெழுத்துகளாவன. பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
-----
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
- உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
- உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
- ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
- உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
- உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
- உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
-----
க் + அ = க.
அ + க் = அக்
No comments:
Post a Comment