Saturday, 26 November 2016

புதிர்: ஔவையாரின் ஆத்திசூடி சிதறிக் கிடக்கின்றது


ஔவையாரின் ஆத்திசூடி சிதறிக் கிடக்கின்றது.சரி செய்து, கண்டுப் பிடித்தவைகளுக்கு பொருளும் குறிப்பிடணும்.

திகழ்ச்சி, சினம், தொழியேல், கைவிடேல், ஓதுவ, பேசேல், எண்ணெழுத், இயல்வது, ஔவியம், ஊக்கமது, ஏற்ப, ஆறுவது, திகழேல், கரவேல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
===============================================

விடை:

ஆறுவதுசினம், 
இயல்வது கரவேல்,
ஊக்கமதுகைவிடேல்
எண்ணெழுத்திகழேல்
ஏற்பதிகழ்ச்சி
ஓதுவதொழியேல்
ஔவியம்பேசேல்
 
===============================================

விளக்கம்

ஆறுவது சினம்.
சொற்பொருள்: ஆறுவது- அடங்க வெண்டியது; சினம்- கோபம்.
கருத்து        : நாம் அடக்க வேண்டியது சினமே ஆடும்.

இயல்வது கரவேல்
சொற்பொருள் : இயல்வது- உன்னால் செய்ய முடிவதை; கரவேல்- செய்யாமல் மறைத்து வைக்காதே.
கருத்து         : நம்மால் முடிந்ததை மறைக்காமல் செய்ய வேண்டும்
 
ஊக்கமது கைவிடேல் சொற்பொருள்
சொற்பொருள் : ஊக்க்கம் அதை- உற்சாகத்தை; கைவிடேல்- இழந்து விடாதே
கருத்து         :ஒரு செயலைச் செய்யும் போது தடை ஏற்படுமாயினும், அது கண்டு உற்சாகம் குன்றிவிடக் கூடாது.

எண் எழுத்து இகழேல்
சொற்பொருள் : எண்-விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும்; எழுத்து - இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும்; இகழேல்- அலட்சியம் செய்யாதே.

ஏற்பது இகழ்ச்சி
சொற்பொருள்: ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); இகழ்ச்சி- இழிவைத் தருவது)
கருத்து        : யாசிப்பது இழிவு தரும் செயலாகும்
 
ஓதுவது ஒழியேல்
சொற்பொருள் : ஓதுவது- கறபது; ஒழியேல்-விட்டு விடாதே.
கருத்து         : எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது.

ஔவியம் பேசேல்
சொற்பொருள் : ஔவியம்-பொறாமை; பேசேல்- பேசாதே
கருத்து         : பொறமை கொண்டு பேசுவது கூடாது.

No comments:

Post a Comment